Saturday, February 27, 2016

ஹைக்கூ கிறுக்கல்கள்-பாகம் 2

காதல் தோல்வி:
இன்று எனக்கு திதி
யார் சொன்னது மூச்சு நின்றால் தான்
 மரணம்  என்று

அண்ணன்:
தென்னங்கீற்றில் பின்னல் கற்று
பின்னினேன் இரட்டை ஜடை
பாவை இவள் விரல் கொண்டு
பின்னல் ஜடை பார்க்கும் அழகு
கண் போன தங்கை அவள்
என் தாய் பெற்ற என் தங்கம் அவள்

உன் விழிகள் :
கோடிக் கம்பன் குடியிருக்கும்
நூலகமாய் உன் விழிகள்
தேடித் தேடி தினம் படிக்கும்
வாசகனாய் என் விழிகள்

முள்ளும் கல்லும்:
அன்பை மட்டுமே எதிர்பார்த்திருந்தேன் மனதில் குத்தினாய் முள்ளாய்
உன்மேல் பழி வேண்டாமென்று என்னெஞ்சை ஆக்கினேன் கல்லாய்

கோபம்:
அன்னை தெரசாவின்
கோபம் கருணையில்
இருக்கிறது.!
அப்துல் கலாமின்
கோபம் அக்கினிச் சிறகுகளில்
இருக்கிறது.!
பாரதியின்
கோபம் கவியில்
இருக்கிறது.!
என் கோபம்
என் மௌனத்தில்
இருக்கிறது.!

நொடிகள்:
நான் : நினைவிருகின்றதா, அன்று ஒரு நாள்.......
நீ: ஊன்னுடன் இருந்த ஒவ்வொரு நொடியும் நினைவிருகின்றது, என்னவென்று சொல்


கணவன் மனைவி :
பெண்கள் பலர் உதட்டு சாயம் பூச
நான் புன்னகையே உதட்டு சாயமாய் பூசினேன்
நமக்குள் சண்டை வரும் பொழுது
குழந்தை சொன்னது
நானும் வரேன்ப்பா அம்மாக்கூட விளையாட

பௌர்ணமி :
பொட்டிக்குள் அடைக்கபடாத விதவை
தேய்ந்தாலும் வளர்ந்துவிடும் சுதந்திரம்

மணப்பெண்ணும் தந்தையும் :
என்னை விட்டு பிரிந்து சென்றால்,
தயவுசெய்து அழுது விடதே,
உன் பிரிவால் ஏற்படும் வலியை விட,
உன் கண்ணீரால் ஏற்படும் காயங்கள்தான் அதிகம்

லஞ்சம்:
லஞ்சத்தின் பிறப்பிடம் இலவசம்