Tuesday, December 22, 2015

ஹைக்கூ கிறுக்கல்கள்-பாகம் 1


பெண்கள்:
தீப்பெட்டிக்குள்   அடைக்கப்பட்ட தீக்குச்சிகள் 

காணிக்கை:
எப்படியும் விடிய போகும் இரவிற்கு 
கடவுளுக்கு கொடுக்கப்படும் லஞ்சம் 

கடற்கரை மணல்:
குழந்தையின் மணல் துகள் குவியலில் 
முதல் கனவு வீடை கட்டும் அப்பா 

நாணம்:
நீ இமை மூடும் போது எனக்கு ஏற்பட்ட மின்வெட்டு 
நாணம் என் ஊனம் ஆனது 
பிரம்மனின்  பிழை 

வெப்பம்:
அழகாய் தோன்றி 
அமைதியாய் மறைகிறாய் 
நடுவில் ஏன்  இந்த ஆரவாரம் 

தொலைவு:
இரக்கமற்ற தொலைவு 
உறக்கமற்ற இரவுகள் 
முதியோர் இல்லத்தில் தாய் 

தேடல்:
கற்றது ஒன்னேமுக்கால் 
பெருவது ரெண்டேமுக்கால் 
வரதட்சனை  வேட்கையில் 
வருங்கால வாலிபர்கள் 

தாஜ்மகால்:
மனைவி இறந்தற்காக கணவன் கட்டிய வெள்ளை புடவை

வறுமை:
சட்டைக்கு கஞ்சிப்போட்டேன் எதிரே பசியோடு ஏழைச் சிறுவன்!

சிறை:
என் இதயத்தை திருடியது நீ 
சிறைபட்டேன் உன் புன்னகைக்கு கைதியாய்

முத்து :
உன் பெயரைக் கடற்கரை மணலில் எழுதினேன் 
அலை அடித்து சென்றது முத்து கடலுக்கே  சொந்தமாம் 

பந்தயம்: 
பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன் 
ஆனால் உன் ஆருகில் சென்றபின் 
முந்திக்கொண்டு ஜெய்த்தது மௌனமே

அலுவலகம் :
இரு கண்கள் கண்ட கனவை 
பல கண்கள் நிறைவேற்றும் கூடு 

நிழல்:
நிழலை கண்டு பயந்தேன் சிறு வயதில் 
இன்று நானே மாறினேன் நிஜமில்லாத நிழலாய்

வறுமையில் இன்றைய இளைஞன் :
பாரதியுடன் வறுமையில் துணை நின்ற 
செல்லம்மாவின் திருமண வயது ஏழு
இன்று செல்லம்மாக்கள்  இல்லை 
ஆனால் பாரதிகள்  உண்டு

No comments:

Post a Comment